12/30/2011

அழகான பேஸ்புக் கவர் பேனர்.............

பேஸ்புக்கின் புதிய Timeline தோற்றத்தில் Cover என்ற ஒரு புதிய வசதி உள்ளது. இந்த இடத்தில் நமக்கு தேவையான ஒளிப்படத்தை வைத்து கொள்ளலாம்.
இணையத்தில் ஏராளமான ஒளிப்படங்கள் இருந்தாலும் அனைத்தும் பேஸ்புக் timeline cover ஏற்ற அளவில்(size) இருக்காது. ஆதலால் பேஸ்புக் timeline ஒளிப்படங்கள் வைப்பதற்கென்றே சில பிரத்யோகமான தளங்கள் உள்ளது.
1. 99covers: இந்த தளத்தில் மிகச் சிறந்த bannerகள் உள்ளது.
2. facebookprofilecovers: இந்த தளத்திலும் விதவிதமான அழகான பேஸ்புக் கவர் ஒளிப்படங்கள் உள்ளது.
3. timelinecoverbanner: இங்கு விதவிதமான அழகான பேஸ்புக் பேனர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மற்றும் இதில் உள்ள bannerகளை உங்கள் விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்.

12/20/2011

பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு;;;;;;;;;;;;;;

இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு.
சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும், அந்த வகையில் இன்று மனதிற்கு ஒய்வளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும். அதே போல் தான் சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்கும். இப்படி அழகான படமும் ஒய்வளிக்கும் இசையையும் நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இயற்கையில் இருந்து வரும் மெல்லிய இசை நம் மனதிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில் இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்கு தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதிற்கு ஓய்வளிக்கும்.

கூகுளின் சில மேஜிக்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது.
Let it Snow: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.
Tilt: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.

12/19/2011

தொல்லை தரும் அழைப்புகளை நீக்க..........

மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். எங்கு பார்த்தாலும் செல்போன் கோபுரங்கள், செல்போன் கடைகள் பரவியுள்ளது.



Service Provide  அதாவது Aircel, Airtel,  Vodafone போன்ற பல்வேறு நிறுவனங்களின் மூலமாக போன்செய்யும் வசதி பெற்று வருகிறோம். SERVICE,ALERTS  போன்ற சேவைகளை தினமும் போன் செய்து சர்வீஸை ஆக்டிவேட் செய்யுமாறு நாம் பயன்படுத்தும் கம்பெனியிலிருந்து தினமும் பல அழைப்புகள் வரும்.

நாம் சில நேரங்களில் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது இது போன்ற போன் கால்கள் தொந்தரவு செய்யும். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் எந்த சர்வீஸை ஆக்ட்டிவேட் செய்தோம் என்றே தெரியாது ஆனால் பேலன்ஸ் மட்டும் குறைந்து இருக்கும், என்ன காரணம் என்று புரியாமல் வாடிக்கையாளர் சேவை மையத்தை நாடி காரணம் கேட்டால், நம் தரப்பிலிருந்து தான் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இது போன்ற போன் அழைப்புகளை  நிறுத்த முடியும் அதை பற்றி கீழே காண்போம்.

முதலில் National Do Not Call Registry (NDNC Registry) என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.

1.AIRCEL:

ஏர்செல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த "START DND" to "1909" (Toll Free) என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய ”STOP DND” to “1909”(Toll Free).


2.AIRTEL:
ஏர்டெல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 121 என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய "STOP DND" to 121.




3.VODAFONE:

Vodafone-லிருந்து வரும் அழைப்புகளை நீக்க ACT DND to 111என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும்.
 Deactive செய்ய CAN ACT என்ற என்னுக்கு SMS செய்ய வேண்டும்.









4.BSNL:

BSNL-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க, IVRS ஆப்ஷன் மூலகாக நிறுத்த 1909 என்ற என்னுக்கு போன் செய்து Active மற்றும் Deactive செய்ய முடியும்.

SMS மூலமாக நிறுத்த START DND to 1909 மீண்டும் அதனை Deactive செய்ய STOP DND to 1909.




5.Reliance:



Reliance-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.







6.Tata Indicom:
Tata indicom-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க Click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.








7.Tata Docomo:

TATA DOCOMO-ல் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த START DND to 1909 (toll free) தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய STOP DND to 1909(toll free).








8. Idea Callular:
 Idea-வில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 1909 தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய  “STOP DND” to 1909.



இது எனக்கு தெரிந்தவை உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கு பகிந்து கொள்ளவும்.............................. 

USBக்கு கடவு சொல் கொடுப்பது எப்படி?


நன்றி தமிழ் கம்ப்யூட்டர்/////////// samy;;;;;;;
நம்மிடம் உள்ள முக்கியமான டேட்டக்களையும்
மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம்
பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ஆகும்.
இவற்றில் தற்போது அனைவரும் பயன்படுதுவது Pen Drive ஆகும்.
PenDrive ல் உள்ள தகவல்களை யாரும் பார்க்காதவாறு செய்யலாம்.
நம்மிடம் உள்ள Pendrive க்கு பாஸ்வேர்ட் கொடுக்க முடியும்.

அதற்க்கு Ross Mini என்னும் மென்பொருளை இணையத்திலிருந்து
பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

மென்பொருளை பதிவிறக்க: Rohos Mini

இன்ஸ்டால் செய்த பின் Rohos Mini மென்பொருளை Open செய்யவும்.
படம் 1 யை பார்க்கவும்.



படம்-1


அதில் Setup USB key என்பதனை கிளிக் செய்யவும்.
Pendrive கணினியுடன் இணைக்கபட்டிருந்தால் Pendrive
அளவு தெரியும்.படம் 2 யை பார்க்கவும்.

படம்-2


அதில் Change என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்
Disksiz மற்றும்File system போன்றவற்றை தேர்வு செய்யவும்.
பட்ம் 3 யை பார்க்கவும்.

படம்-3

பின் ஒகே செய்யவும். Password கொடுத்து Createdisk என்பதை
கிளிக் செய்யவும்.படம் 4 யை பார்க்கவும்.

படம்-4

Performing operation என்ற செய்தி திரையில் தோன்றும்.
படம் 5 யை பார்க்கவும்.

படம்-5

பின் இரண்டு நிமிடத்தில் Rohos Successfuly created என்ற செய்தி
திரையில் தோன்றும்.படம் 6 யை பார்க்கவும்.

படம்-6

பின் Rohos Icon யை கிளிக் செய்து, வரும் விடோவில்
Conect disk என்பதனைகிளிக் செய்யவும்.படம் 7 யை பார்க்கவும்.

படம்-7
Connectdisk என்பதை கிளிக் செய்தவுடன் வ்ரும் விண்டோவில்
Password யை கொடுத்து. Pendrive யை Open செய்ய முடியும்.
படம் 8 யை பார்க்கவும்.

படம்-8

Pendrive யை விட்டு வெளியே வரும் போது.
Rohos Icon யை கிளிக் செய்து வரும் விண்டோவில்
Tools என்பதனைகிளிக் செய்யவும்.படம் 9 யை பார்க்கவும்.


படம்-9

அதில் Disconnect என்பதை கிளிக் செய்து விட்டு வெளியேறவும்.
படம் 10 யை பார்க்கவும்.

படம்-10

இனி Pendrive க்கும் Password கொடுத்து பயன்படுத்த முடியும்...................

12/18/2011

கண்களுக்குப் பயிற்சி;;;;;;;;;;;

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி;;;;;;;;;;

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.



புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படம் போல் உருவாக்கு வது எப்படி?

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலேசான இளம் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம், அந்த காலத்து புகைப்படங்கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லும் நாம் இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு....


தொழில்நுட்ப மாற்றங்கள் நாளும் பெருகி வரும் வேலையில் ஆன்லைன் மூலம் சில நொடிகளில் பல வித்தைகள் செய்யலாம் அந்த வகையில் எந்த மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களை பழையாகாலத்தில் எடுத்த புகைப்படம் போல் மாற்றலாம் நமக்கு உதவ ஒரு தளம் இருக்கிறது,,,,,,,,,,,,,,,,,,




இத்தளத்திற்கு சென்று படத்தில்  காட்டியபடி Choose File என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்பதை சொடுக்கி பதிவேற்றம் செய்ய வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்த புகைப்படம் பழைய காலத்து புகைப்படமாக  மாற்றப்பட்டிருக்கும்.இதன் முடிவில் காண்பது போல் .மாற்றப்பட்ட இந்த புகைப்படதின் மேல் Right Click செய்து Save  image as என்பதை சொடுக்கி நம் கணினியில் சேமித்தும் வைக்கலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை, இன்று எடுத்த புகைப்படத்தை கூட அந்த காலத்தில் எடுத்த புகைப்படமாக மாற்ற விரும்பும் புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்........................



எப்படி இருக்கு ? //////////////////////////
இணையதள முகவரி : http://www.youroldpic...............................

12/05/2011

கணினியின் செயல்படுவேகத்திறனை பராமரிக்க உதவும் இலவச மென்பொருள்கள் ;;;

நன்றி கம்பியூட்டர் மெக்கானிக்;;;;;;;



கணினியை தினமும் பயன்படுத்தினால் அதன் செயல்பாடு திறன் நாள் அடைவில் குறைந்து விடுகிறது, என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. அதற்கு முக்கியமான காரணம் operating system-தினால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகள் மற்றும் registry என்கிற மென்பொருள் பதிவேடும் தான். Operating System திறன்பட இயங்க இந்த தற்காலிக கோப்புகள் மிக முக்கியமானவை. ஆனால் அதன் வேலை முடிந்த உடன் தற்காலிக கோப்புகள் தேவையற்ற ஒன்று தான். தொடர் உபயோகத்தினால் தற்காலிக கோப்புகள் மலை போல சேர்ந்து கொண்டே வரும். அதனால் hard disk-யில் இடம் குறைத்து கொண்டே வருவதனால் operating system மெதுவாக இயங்கும். Windows Operating System தானாக எல்லா தற்காலிக கோப்புகளையும் அழிக்காது.


இவ்வாறு சேர்த்துக்கொண்டே வரும் கோப்புகளை நாம் தான் அடிக்கடி அழிக்கவேண்டும். மேலும் மென்பொருள் பதிவேடையும் பராமரிக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு பராமரிப்பு பணிகளையும் எளிமையாக்க CCleaner என்கிற மென்பொருளை பயன்படுத்தலாம். CCleaner ஒரு இலவச மென்பொருள். இதனை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

1. CCleaner-ரை டவுன்லோட் செய்து நிறுவியபின் எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம். CCleaner-ரை ஓபன் செய்தால் இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும்:

2. இந்த விண்டோவின் இடதுபுறம் உள்ள cleaner-என்பதை தேர்வு செய்து வலதுபுறம் உள்ள Analyze-என்கிற பட்டனை கிளிக் செய்தால் என்ன-என்ன கோப்புகள் அழிகவேண்டியவை மற்றும் disk-ல் அதன் ஆக்கிரமிப்பு அளவினை குறிப்பிடும். மொத்தம் எவ்வளவு இடம் காலியாகும் என்கிற செய்தி கூட வரும். பிறகு run cleaner-என்கிற பட்டனை கிளிக் செய்தால் அனைத்து தேவையில்லா கோப்புகளையும் தானாகவே அழித்துவிடும். அழித்தபின் எவ்வளவு இடம் காலி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும்.

3. அடுத்து வலது பக்கம் உள்ள registry-என்கிற பட்டனை கிளிக் செய்யவும். இந்த விண்டோவில் இடது பக்கம scan for issues-பட்டனை கிளிக் செய்தால் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள் பதிவேடுகளையும் ஆராயும். அதில் ஏதேனும் தவறு இருந்தால் காட்டி விடும். பின்பு fix selected issues...-என்கிற பட்டனை கிளிக் செய்து பதிவேட்டை சரி செய்யல்லாம். சரி செய்வதற்கு முன் அப்போதைய பதிவேட்டை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக save-செய்ய சொல்லும். நீங்கள் அதனை save-செய்து விட்டு பதிவேட்டை சரி செய்யல்லாம். பின்னர் பராமரிப்பு முடித்தபின்பு என்ன பனி செய்யப்பட்டது என்கிற செய்தி வரும்.
4. அடுத்தது வலது பக்கம் உள்ள tools-யை கிளிக் செய்யவும். பின்பு start up..-என்கிற தேர்வை கிளிக் செய்தால் கணினி தொடங்கும்போது தேவை படும் மென்பொருள்களின் பட்டியல் காண்பிக்கப்படும். அதில் இருந்து நமக்கு தேவை படாத மென்பொருள்களை நீக்கி விட்டால் கணினி மிக வேகமாக தொடங்கும். ஏனென்றால் கணினி தொடங்க தேவை படும் மென்பொருள்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். தெயவைல்லாத மென்பொருள்கள் இந்த தொடக்க பட்டியியலில் தானாகவே இணைத்து கணினியின் தொடக்க வேகத்தை குறைத்து விடுகின்றன.

மேற்கண்ட அனைத்து பராமரிப்பு பணிகளை வாரம் ஒரு முறை கடைபிடித்தால் operating system-மிக சீராக இயங்கும்.